"வரலாற்று நாவல்களின் தந்தை கல்கி கிருஷ்ணமூர்த்தியின் கைவண்ணத்தில் உருவான திகில் கலந்த குறுநாவல் இது.ஆங்கிலப் படங்களைப் பிடிக்காத ஒருவனிடம், பர்மாவிலிருந்து திரும்பிய நண்பன் ஒருவன் தன் விசித்திரமான பயண அனுபவத்தைப் பகிர்வதிலிருந்து கதை தொடங்குகிறது. இரண்டாம் உலகப் போரின் உக்கிரம்... நடுக்கடலில் எப்போது வேண்டுமானாலும் குண்டு வீசப்படலாம் என்ற பதற்றம். எதிரிகளின் கண்களில் படாமல் இருக்க, அந்தக் கப்பல் ஒரு மர்மத் தீவின் மறைவில் தஞ்சம் புகுகிறது. ஆள் அரவமற்ற அந்தத் தீவில் மனிதர்களே இல்லை என்று நினைக்கும்போது, ஒரு ஆணும் பெண்ணும் தென்படுகிறார்கள். வியப்புக்குரிய வகையில் அவர்கள் செந்தமிழில் பேசுகிறார்கள். யார் அவர்கள்? அந்தத் தனித்தீவில் அவர்களுக்கு என்ன வேலை? அந்தத் தீவு சொல்லும் ரகசியம் என்ன? விடைகள் தெரிந்துகொள்ள கேளுங்கள் 'மோகினித் தீவு'."
Join our community for the latest bookish news, reading recommendations, exclusive opening extracts, author events and competitions. It\'s all free. And enter a monthly draw to win a £50 Gift Card. See past winners here